மயிலாடுதுறை, ஜன.3: நாகை மாவட்டம் மயிலாடுதுறை, வில்லியநல்லூர் அருகே கண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை மரிய அடைக்கலம் தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் 150 பேர் கலந்துகொண்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம். தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம். பாலித்தின் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கிராம துப்புரவு பணியாளர் சிவானந்தம் பள்ளி பயன்பாட்டுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைக்கான குப்பைத்தொட்டிகளையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.