×

ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.3:  கிருஷ்ணகிரியில் ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரில் இருந்து சேலம் பைபாஸ் சாலையை இணைக்கும் சாலை ஜக்கப்பன் நகரில் பகுதியில் இருந்து செல்கிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகிறது. நகரில் ஜக்கப்பன் நகர், திருவள்ளுவர் நகர், போலீஸ் காலனி, பிடிவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சேலம், தர்மபுரி போன்ற நகரங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்டது இந்த சாலையாகும். பல நூறு பேர் பயன்படுத்தும் சாலை பழுதடைந்துள்ள நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களை ஓட்ட முடியாத நிலையில் சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், ஜல்லி கற்கள் குத்துவதால் டயர்கள் பஞ்சராகிவிடுகிறது. இதுபோன்ற அவல நிலையை போக்கிட உடனடியாக இந்த சாலையை சீர் செய்து, தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி