×

தேசிய உழவர் உழைப்பாளர் கழக மாவட்ட செயலாளர் நியமனம் நிறுவனரிடம் வாழ்த்து

கிருஷ்ணகிரி, ஜன.3: தேசிய உழவர் உழைப்பாளர் கழத்தின் மாநில அளவிலான பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிறுவனர் டாக்டர் ஜோதிகுமார் தலைமை வகித்தார். ஈரோடு மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் நல்லசாமி, மாநில செயலாளர் தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நாகராஜன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். விழாவில் தர்மபுரி மாவட்ட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் மாவட்ட செயலாளராக நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டு கழகத்தின் பணிகளை மேற்கொள்வார் என கழக தலைவர் ஜோதிகுமார் அறிவித்தார்.
கழத்திற்கு பரிந்துரை செய்த எல்லப்பன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோருக்கு நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

Tags : founder ,Dairy Labor Union ,
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை