×

கருணைத்தொகை வழங்க கோரி தர்ணா போராட்டம்

திருப்பூர், ஜன.3: திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பொங்கல் கருணைத்தொகை வழங்கக்கோரி மாநகராட்சி முன் தர்ணா போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பொங்கல் கருணைத்தொகை, குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பாக்கியம், மாவட்ட தலைவர் நாட்ராயன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நாராயணன், அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம், கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் சுசீலா நன்றி கூறினார்.

Tags : Darna ,struggle ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...