×

டாஸ்மாக் பாரில் தகராறு: இரண்டு வாலிபர்களுக்கு பீர் பாட்டில் குத்து

திருப்பூர்,ஜன.3: திருப்பூர்  பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர்கள் பீர்  பாட்டிலில் குத்தியதில் இருவர் காயமடைந்தனர். திருப்பூர்  பெருமாநல்லூர் நாதம்பாளையம் பகுதியைச்சேர்ந்த சரத்குமார்(25) இவரின்  சகோதரர் ஜனர்த்தனன்(30) இருவரும் நேற்று முன் தினம் இரவு கணக்கம்பாளையம்   பிரிவிலுள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு சென்று குடித்தனர். அப்போது உணவு பொருள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையால் பார் ஊழியர்களிடம்  சகோதரர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து ஆவேசமடைந்த பார்  ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் பீர் பாட்டிலில் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார்  விசாரிக்கின்றனர்.

Tags : men ,
× RELATED பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!