×

நேரடி கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடங்கள் பணி விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி

தஞ்சை,  ஜன. 3: தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  பருவகால பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 18ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் 150 பட்டியல் எழுத்தர், 150 உதவுபவர், 150 காவலர் ஆகிய  பருவகால பணியிடங்கள் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படவுள்ளது. பட்டியல்  எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க பிஎஸ்சி (பயாலஜி), பிஎஸ்சி (நான்பயாலஜி)  படிப்பும், உதவுபவர் பணிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பும் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் காவலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்சி பெற்றிருக்க  வேண்டும். விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில்  சான்றொப்பமிட்ட கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 18ம்  தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.



Tags : workplaces ,procurement centers ,
× RELATED அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி...