×

போட்ட சில ஆண்டிலே உருக்குலைந்து போன உருவாட்டி சாலை வாகனஓட்டிகள் அவதி

காளையார்கோவில், ஜன. 3:  காளையார்ேகாவில்- உருவாட்டி சாலை சேதமடைந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காளையார்கோவில் அருகே பள்ளிதம்பம், வேம்பணி, உருவாட்டி, அம்மாபட்டி மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளன. காளையார்கோவிலில் இருந்து செல்லும் இவ்வூர்களுக்கு தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இப்பகுதி விளைபொருட்கள், ஈடுபொருட்களை காளையார்கோவிலுக்கு கொண்டு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல இச்சாலை வழியாகத்தான் பயணிக்கின்றனர்.

உருவாட்டி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் வரும் ஏராளமானோர் இச்சாலையின் வழியாகவே செல்ல வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘‘இச்சாலையில் செல்லும் மினிபஸ் மேடு, பள்ளங்களால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. இரவுநேரங்களில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலை சேதமடைந்ததற்கு தரமற்ற பணிகளே காரணமாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்’’ என்றார்.

Tags : Some ,
× RELATED சிறுத்தை பற்றி வதந்தி பரப்பினால்...