×

செம்பனார்கோவில் பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

செம்பனார்கோவில், ஜன.3:  செம்பனார்கோவிலில் பாஜக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்தவிஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், மயிலாடுதுறை எம்பி தொகுதி அமைப்பாளர் சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் உமாரதி, பட்டியலணி மாநில அணி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கொள்ளிடம் தடுப்பணைக்கு அணை கட்ட நிதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது. அதிக அளவில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது. மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது. மாதம் தோறும் தெருமுறை பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் வாக்குசாவடி நிலை முகவர்கள் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்கள், மாநில, மாவட்ட மண்டல அணி பிரிவு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய தலைவர் பாலாஜி குருக்கள் நன்றி கூறினார்.

Tags : Meeting ,Northern District Administrators ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்