×

பைக்கிலிருந்து கீழே விழுந்த முதியவர் பரிதாப சாவு


புதுச்சேரி, ஜன. 3: சோனாம்பாளையம் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.புதுவை,  உருளையன்பேட்டை, அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் முரளிதரன் (63).  வெளிநாட்டில் பணியாற்றும் இவர் சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி  வந்துள்ளார். புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் சோனாம்பாளையம் அருகே  பைக்கில் சென்று கொண்டிருந்த முரளிதரனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதில்  வண்டியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முரளிதரனுக்கு தலையில் பலத்த  காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே  அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...