×

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: எஸ்பியிடம் புகார்

காஞ்சிபுரம், ஜன.3: பெரும்புதூர் தாலுகா நெமிலி அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா மற்றும் போலீஸ் எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:பெரும்புதூர் தாலுகா நெமிலி கிராமத்தில் இருக்கும் எனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வி.ஜி.பி.பிரமோட்டர்ஸ் உரிமையாளர் வி.ஜி.எஸ் ராஜேஷ் என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். எனவே, இதனை விசாரணை செய்து எனக்கு உண்டான சொத்துக்களை எனது பெயரிலேயே மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது சம்பந்தமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி போலி ஆவணங்களை தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத் தரவேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : SPB ,
× RELATED எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை