×

அஞ்சுகிராமம் அருகே நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து

அஞ்சுகிராமம், ஜன.3:  அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுன் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அவருக்கு சொந்தமான ஓடு மற்றும் ஓலை ேவய்ந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஓடு போட்ட பகுதியை வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி அடித்து வெளியே ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டார்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே தீ விபத்தில் காயமடைந்த ராமகிருஷ்ணனை உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று  வருகிறார்.



Tags : fire ,house fire ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு