×

துறையூரில் பெண் குளிப்பதை படம் பிடிக்க முயன்றவர் சிக்கினார் போலீசில் ஒப்படைப்பு

துறையூர், டிச.28: துறையூரில்அடுத்தவர் மனைவி குளிப்பதை பாத்ரூமில் செல்போனில் படம் எடுக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ராமர் (40). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். ராமர் மின்வாரியத்தில் மின்கம்பி ஆய்வாளராக உள்ளார். இவர் இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பாத்ருமில் அதிகாலையில் பெண் குளிப்பதை செல்போனில் வென்டிலேட்டர் வழியாக படம் பிடிக்க முயன்றுள்ளார். ப்போது அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் வாசல் தெளிக்க வெளியே வரும்போது ராமர் பக்கத்து வீட்டு பாத்ரூம் அருகில் செல்போனுடன் எட்டிப்பார்ப்பதை கண்டு சத்தம் போட்டார். கூட்டம் கூடியதும் ராமர் வீட்டிற்குள் சென்று கதவைமூடி பதுங்கிக் கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்திற் குசென்று புகார் கொடுக்கும் சமயத்தில் வீட்டில் இருந்து தப்பித்த ராமர் தனது மனைவி, குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பி விட்டு காரில் தப்பித்து சென்று தலைமறைவானார். புகார் கொடுத்தவர்கள் ராமரை தேடி வந்த நிலையில் துறையூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரண்டு நாட்களாக அறை எடுத்து மது அருந்தியவாறு மறைந்திருப்பதை கண்டுபிடித்து ராமரையும் காரையும் துறையூர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். அதன்பேரில்துறையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமர் ஏற்கனவே இதேபோல் இரண்டுமுறை குற்றச்சாட்டுக்கு ஆளாகி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு