×

கறம்பக்குடி அருகே கடுக்காகாடு சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கறம்பக்குடி, டிச.28: கறம்பக்குடி அருகே கடுக்காகாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு செல்லும் சாலையில் உள்ள மெகா பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் முள்ளங்குறிச்சி ஊராட்சியும் ஒன்றாகும்.  இந்த ஊராட்சியில் கடுக்காக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக சில வருடங்களுக்கு முன்பு சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த சாலைகள் வாகன ஓட்டிகள் செல்வதற்கும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் லாயக்கற்று சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக ஆதிதிராவிடர் குடியிருப்பு செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறு தடுப்புக்கட்டை பாலத்தின் நடுவில் மெகா பள்ளம் ஏற்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் தினமும் அதை கடந்து சென்று வருகின்றனர். மேலும் நடந்து செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்வோர் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

 இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  கூறுகையில், கடுக்காக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து தரப்பினரின் நலன் கருதி அப்பகுதிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைத்தும், சாலையின் நடுவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மெகா பள்ளத்தை சீரமைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Megha ,crater motorists ,road ,Kakudakadu ,Karambukudi ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து