×

திருச்செங்கோட்டில் ரிக் அதிபர் மனைவியிடம் 9 பவுன் தாலிக்கொடி பறிப்பு பைக் ஆசாமிகள் அட்டகாசம்

திருச்செங்கோடு, டிச.28:   திருச்செங்கோடு அருகே, நேற்று மாலை நடந்து சென்ற ரிக் அதிபரின் மனைவியை வழிமறித்த பைக் ஆசாமிகள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர். திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியை சேர்ந்த ரிக் அதிபர்  மயில்சாமி(37). இவரது மனைவி பிரியா(32). நேற்று மாலை, கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்றார். ஈரோடு பிரதான சாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் இடத்தில், பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர் அவரை வழிமறித்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர், பிரியாவின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றார். பிரியா தாலிக்கொடியை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு போராடினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பிரியாவை கீழே தள்ளி முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த பிரியாவின் தாலிக்கொடியை பறித்தான். ஆனால், தங்க சங்கிலியில் இருந்த தாலியை மட்டும் விடாமல் பிரியா கெட்டியாக பிடித்துக்கொண்டார். அறுந்த செயினை எடுத்துக்கொண்டு வாலிபர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து பிரியா திருச்செங்கோடு டவுன் ேபாலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rick Chancellor ,
× RELATED திருச்செங்கோடு அருகே கந்துவட்டி...