×

பாம்பன் பாலம் பராமரிப்பு பணி காரணமாக ரயில்சேவை பகுதியாக ரத்து..!!

குமரி: பாம்பன் பாலம் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட இருந்த திருப்பதி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து இரவு 8:52க்கு புறப்படும். மாலை 5:45க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். இரவு 7:15க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். குஜராத் மாநிலம் ஓக்ஹாவிலிருந்து 29ம் தேதி புறப்பட்ட ரயிலும் மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது….

The post பாம்பன் பாலம் பராமரிப்பு பணி காரணமாக ரயில்சேவை பகுதியாக ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Pamban bridge ,Kumari ,Rameswaram ,Mandapam ,Pampan Bridge ,Rameswaram… ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...