×

ஆரணி அடுத்த வடமாதிமங்கலத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை

ஆரணி, டிச. 28: ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வடமதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாய நிலத்தில் அமைத்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த போளூர் தாசில்தார் தியாகராஜன், களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : tasamag shop ,North America ,Aryan ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து...