×

மனைவியுடன் உள்ள உறவை துண்டிக்காததால் டாக்சி டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை காக்ரின் பேசின் சாலையை சேர்ந்தவர் கார்த்திக் (26). கால் டாக்சி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி மேம்பாலம் அருகே ரயில்வே தண்டவாள பகுதியில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், கார்த்திக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், உயிருக்கு போராடிய கார்த்திக்கை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், காக்ரின் பேசின் சாலையை சேர்ந்த கோபி (39) என்பவரின் மனைவியுடன் கார்த்திக் நெருங்கி பழகியுள்ளார். இதை கோபி கண்டித்துள்ளார்.

அதையும் மீறி அவர்கள் உறவு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த கோபி தனது தம்பி பத்மநாபன் (34), நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (30), ராக்கி (30) ஆகியோருடன் சேர்ந்து கார்த்திக்கை வெட்டியது தெரிந்தது. இதைதொடர்ந்து கோபி, அவரது தம்பி பத்மநாபன் ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர்களை தேடி வருகின்றனர்.

* தேனி கே.ஆர்.ஆர்.நகரை சேர்ந்த விக்னேஷ் (28), இவரது நண்பர் மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரை ேசர்ந்த மந்திரமூர்த்தி (32) ஆகியோர் பைக்கில் புதுப்பேட்டை சித்ரா திரையரங்கம் அருகே சென்றபோது, சிமென்ட் கலைவை இயந்திர லாரி மோதி படுகாயமடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் பரசுராமன் (31) என்பவரை கைது ெசய்தனர்.
* புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் கோட்டையா (45). மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. மனைவியுடன் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* அம்பத்தூர் அத்திப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகிலன் (53). ஆவடி மாநகர போக்குவரத்து கழக பணிமனை கண்டக்டர். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* நங்கநல்லூர் நியூ பாரதியார் தெருவை சேர்ந்த குருவாயூரன் (63) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 26 சவரன் தங்க நகை, 1 லேப்டாப் மற்றும் ₹5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
* குரோம்பேட்டை, ராதா நகரை சேர்ந்த பார்த்தசாரதி (38) என்பவருக்கு திருமண தோஷம் இருப்பதாகவும், இதற்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி, 4 சவரன் அபேஸ் செய்து கொண்டு தப்பிய முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.  
* அம்பத்தூர் அடுத்த பாடி, வடக்கு மாட வீதியை சேர்ந்த கோபிநாத் (71) நேற்று காலை நடை பயிற்சி சென்றபோது, ஆட்டோவில் வந்த 3 பேர் இவரை கடத்தி 3 சவரன் செயின் மற்றும் ஒரு மோதிரத்தை பறித்தனர். பின்னர், அவரை நுங்கம்பாக்கம் பகுதியில் இறக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
* திருநின்றவூர், என்ஜிஜிஓ நகர், 2வது மெயின் ரோட்டை சேர்ந்த சந்திரா (65) என்பவரின் கழுத்தில் கிடந்த 10 சவரன் நககைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர்.
* அனகாபுத்தூர் பேட்டை தெருவை சேர்ந்த தேவேந்திரன் மனைவி அகிலா (33) குடும்ப தகராறு காரணமாக நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* மேற்கு மாம்பலம், தலையாரி தெருவில் வசித்து வருபவர் ரேவதி (27). இவருக்கும்  ஆதிகேசவப்பெருமாள் கோயில் தெருவில் அடகு கடை நடத்தி வரும் லதித் சவுத்ரிக்கும் (23) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பின்னர், இந்த உறவை துண்டித்துள்ளனர். ஆனால், தன்னுடன் ரேவதி நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி, லதித் சவுத்ரி ரேவதியை மிரட்டி பாலியல் தொடர்புக்கு அழைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லலித் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் கைது
வியாசர்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கி முத்து என்பவரின் மகள் ராதிகா (12). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள பள்ளியில் இச்சிறுமி 7ம் வகுப்பு படிக்கிறாள். நேற்று முன்தினம் இரவு சிறுமி பெற்றோருடன் வீட்டில் தூங்கியபோது, நள்ளிரவில் ஒரு ஆசாமி, வீட்டில் நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது, அந்த ஆசாமி தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பிடிபட்ட ஆசாமியை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வியாசர்பாடி சஞ்சய் நகர் 7வது தெருவை சேர்ந்த முனியாண்டி (38). ஆட்டோ டிரைவர் என என்பது தெரிந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : wicker ,
× RELATED கிராமங்களுக்கு செல்லும் சாலை...