×

பைக் மாயம்

உளுந்தூர்பேட்டை, டிச. 28:
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை கடை வீதியில் சம்பவத்தன்று கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதியை சேர்ந்த செல்வகணபதி(30) என்பவர் வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடை முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் செல்வகணபதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை