×

விஏஓக்கள் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரம், டிச.25: ராமநாதபுரம் மாவட்ட விஏஒ சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட விஏஓ சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் வட்ட தலைவர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.விஏஓ அலுவலகங்களில் கழிப்பறை முதல் கம்ப்யூட்டர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட அளவில் நடைபெற்ற போராட்டத்தில் பெண் விஏஓக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை