×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க 10ம்தேதி கடைசி


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
வெல்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க 10ம்தேதி கடைசி
திருவாரூர், டிச.25:திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வெல்டர் (பற்றவைப்பவர்) தொழிற்பிரிவுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிமாக பயிற்றுநர் ஒருவர் நியமனம் செய்யப்படவுள்ளார். இதற்கு டி.எம்.இ படித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் மேற்படி தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...