×

நவக்கிரக கோயில்களில் திருப்பணிகளை துவங்ககோரி சங்கு ஊதும் போராட்டம்

கும்பகோணம், டிச. 25: நவக்கிரக கோயில்களில் திருப்பணி துவங்ககோரி கும்பகோணத்தில் இந்து மகா சபா சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது.தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான், கஞ்சனூர் சூரிய பகவான் கோயில், நாகை மாவட்டம் செவ்வாய் பகவான் வைத்தீஸ்வரன் கோயில், கேது பகவான் கோயில் ஆகிய 4 கோயில்களிலும் திருப்பணி செய்து 12 ஆண்டுக்கு மேலாகியும் கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை செய்த பின்பும் இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்தும் எங்களது கோரிக்கையை பரிசீலனைக்கு கூட எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கும் அறநிலையத்துறையை சங்கு ஊதி எழுப்பும் விதமாக நேற்று காலை கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது. தென்மாநில தலைவர் பாம்பாட்டிசித்தர், மாநில துணைத்தலைவர் ராகவன், மாவட்ட செயலாளர் இந்திரஜித், தஞ்சை மண்டல பொது செயலாளர் வேலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Navagraha temple ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு