திருப்போரூர், டிச.25: தந்தை பெரியாரின் 45வது நினைவு நாளையொட்டி திருப்போரூரில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் அன்புச்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கௌரிசங்கர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு துப்புரவு தொழிலாளர் விடுதலை முன்னணி கௌரவ தலைவர் சமரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி திருப்போரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.