சென்னை: சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில், கடந்த 50 வருடங்களாக இந்தியா முழுவதும் சமுதாயப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது சென்னை தேனாம்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் விதமாகவும், கல்வி அறிவு மற்றும் பொது அறிவை மேம்படுத்தும் விதமாகவும் ஐஓபி அதிகாரிகள் சங்கம் சார்பில், பொதுச் செயலாளர் பி.சீனிவாசன், தலைவர் டி.முரளி சவுந்தரராஜன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில், 3 பெரிய அளவிலான அதிநவீன தொலைக்காட்சி சாதனங்கள், தலைமை ஆசிரியயை யசோதா பாய், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.