×

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

பெரம்பலூர், டிச. 25: பெரம்பலூரில் பெரியாரின் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுக, திக, விசி கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.     பெரம்பலூரில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள அவரது சிலைக்கு திமுக சார்பாக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  திராவிடர் கழகம் சார்பாக பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரியார் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள பெரியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து அமைதி ஊர்வலமாக நான்கு ரோடு வழியாக சென்று அண்ணாசிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தா.பழூர்:  தா.பழூர் (கிழக்கு) ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியாரின் 45வது நினைவு நாளை முன்னிட்டு அவரது முழுதிருவுருவ சிலைக்கு ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Periyar ,Perambalur ,Ariyalur district ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு