×

குளத்தூர் அருகே மீனவர் கொலையில் 4பேர் கைது

குளத்தூர்,டிச.25: குளத்தூர் அருகே மீனவர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள தருவைகுளம் 125வீட்டு காலனி சூசைமரியான் நகரைசேர்ந்தவர் தாசன் மகன் தொம்மைஅந்தோணி(33). மீன்பிடித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசித்துவரும் அந்தோணி மகன் மிக்கேல்சாமி(48) என்பவர் தனது வீட்டின் அருகிலேயே ஓலைசெட்அமைத்து பன்றிகளை வளர்த்து வந்தார். அதன் கழிவுகளை வீட்டின் அருகிலேயே கொட்டியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இப்பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மிக்கேல்சாமி அவரது மகன்கள் நெப்போலியன்(24), ஜான்சன்(20) மற்றும் உறவினர்கள் ஜெயராஜ், தனபால் ஆகியோர் கடந்த22ம் தேதி இரவு தொம்மைஅந்தோணி வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு 5பேரும் தப்பியோடினர். இதில் தருவைகுளத்தில் மறைந்திருந்த மிக்கேல்சாமியை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.    தலைமறைவான நெப்போலியன், ஜான்சன், ஜெயராஜ், தனபால் ஆகியோரை இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, கலா தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் தருவைகுளம் சமத்துவபுரம் பஸ்நிறுத்தம் அருகே மறைந்திருந்த ஜான்சன், நெப்போலியன், ஜெயராஜ், தனபால் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள், விளாத்திகுளம் நீதிமன்றம் ஜேஎம் 1ல் ஆஜர்படுத்தப்பட்டு  தூத்துக்குடி பேரூரணி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : fisherman ,murder ,Koothur ,
× RELATED புதுக்கடை அருகே மீனவர் திடீர் சாவு