×

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் காணொளி மூலம் இன்று குறைகேட்பு குறைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

காரைக்கால், டிச.21: புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி இன்று (21ம் தேதி) காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, கலெக்டர் கேசவன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் கேசவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.

இன்று (21ம் தேதி) இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர்,  வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : subsidiary ,Puducherry ,Governor ,public ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு