×

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு வலை

மதுரை கண்மாய்கரையை  சேர்ந்தவர் கண்ணன் (27) கடந்த 2001ம் ஆண்டு கூடல்புதூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். வரும் ஜன. 18ம் தேதி ஜேஎம்3 கோர்ட்டில் இவர் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் புதூர் கற்பக நகரில் உள்ள குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை