×

மது குடிக்க பணம் தராததால் மனைவி மீது கல்வீசி தாக்குதல்

சென்னை, டிச. 21: திருவள்ளூர் மஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (42). இவரது மனைவி பார்வதி (38). நேற்று  முன்தினம் மாலை தனக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது கணவன் சங்கர், ‘‘எனக்கு குடிக்க பணம் தராமல் இங்கு என்ன செய்கிறாய்’’ என கேட்டு கருங்கற்களால் மனைவி பார்வதி மீது வீசி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த பார்வதி திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவனை கைது செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Calamity ,
× RELATED களக்காடு தலையணையில் வெள்ளம் தணிந்தது:...