திருப்பூர், டிச.21: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விசைத்தறி, பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் எம்.எல்.எப்., அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மதிமுக., அவை தலைவர் துரைசாமி, நகர செயலாளர் சிவபாலன், விசைத்தறி, பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பாண்டியராஜ், பஞ்சாலை சங்க செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகரன், பொங்கலுார் நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக ஈஸ்வரன், துணை தலைவர்களாக பூபதி, ஜெயக்குமார், சீனிவாசன், சவுந்தரராஜன், திருமலைசாமி, முத்துச்சாமி. பொது செயலாளராக பாண்டியராஜ், பொருளாராக மனோகர் தேர்வு செய்யப்பட்டனர்.