×

வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ‘கட்’

வேலூர், டிச.21: வேலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த சிஇஓ மார்ஸ் உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிஇஓ மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது. இந்த விடுமுறையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

10ம் வகுப்புகளுக்கு தினந்தோறும் ஒரு பாட ஆசிரியர் வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரைநாளுக்கு ஒரு பாட ஆசிரியர் வரவேண்டும். இந்த சிறப்பு வகுப்புகளில் செய்முறை தேர்வு மற்றும் பாடத்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை தலைமை ஆசிரியர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore ,district students ,semi-vacation ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...