திருப்பூர்,டிச.20: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து நேற்று திருப்பூரில் பொது மக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தனர்.தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட இடமாறுதல் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ., டிஜிட்டல் கையொப்பத்துடன், ‘இ-அடங்கல்’ வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் திருப்பூர் நல்லுார் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினர்.