×

ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்புடன் துவங்கியது கிடப்பில் போடப்பட்டுள்ள ரூ.8 கோடி மதிப்பிலான நவீன கலவை உரக்கிடங்கு

ஜெயங்கொண்டம், டிச.20: ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.8 கோடி மதிப்பிலான நவீன கலவை உரக்கிடங்கு திட்டம் கிடப்பில் போட்டதால்  தளவாடங்கள் எந்திரங்கள் சேதமாகி வருகிறது. இதற்கு  மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கசள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் செங்குந்தபுரம், சின்னவளையம், வேலாயுதநகர், கரடிகுளம், கீழகுடியிருப்பு, மேல குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 21 வார்டுகள் 33, ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் நகராட்சியில் பணிசெய்யும் சுமார் 159 துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளுவதற்காக கை வண்டிகளும் வழங்கப்பட்டு வீடுகளில், வீதிகளில் குப்பைகளை அள்ளி கொம்மேடு பகுதியில் கொட்டப்பட்டன. இதற்கிடையே தற்பொழுது நகராட்சியால் கட்டப்பட்ட சமுதாயகூடம் அருகே குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக வேண்டுவோருக்கு வழங்கப்பட்டு வந்தன. மக்காத குப்பைகளை அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிவூட்டுவதற்காக அனுப்பப்பட்டு வந்தன. இந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக செங்குந்தபுரம் அருகே புதுக்குடி ஊராட்சியில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.7 கோடி 22 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பில் நவீன கலவை உரக்கிடங்கு அமைப்பதற்காக துவங்கப்பட்டது.

கல்லுக்குழி என்ற இடத்தில் சுமார் 15 அடி உயரத்திற்கு அடித்தளம் அமைத்து அதன் மேலே பெரிய பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு திட்டம் துவங்கப்பட்டது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் என்ன காரணத்தினாலோ திட்டம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை துவங்குவதற்கு முன் புதுக்குடி ஊராட்சியில் பலமுறை பொதுமக்கள் இந்த இடத்தில் திட்டம் துவங்கக்கூடாது என போராட்டம் நடத்தி வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று நடைபெற்றது. அதிலும் வெற்றி பெற்று நகராட்சி திட்டத்தைத் துவங்கியது. இருந்தபோதிலும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுமார் ரூ.5 கோடி மதிப்பில் பெரிய அளவில் தரையை சமன்படுத்த ரோலர், குப்பைகளை அள்ளிவர டோசர், ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்கள் வாங்கப்பட்டன. அந்த எந்திரங்களும் தற்போது உபயோகமில்லாமல் வாரச்சந்தைக்கு பின்புறமும் பேருந்து நிலையத்திற்கு பின்புறமும் உபயோகமில்லாமல் நின்றுள்ளன. பொதுமக்களுடைய வரிப்பணம் உபயோகமில்லாமல் சிதலமடைந்து வருகின்றன. இவற்றை எப்போது சீரமைக்கும் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

Tags : protests ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...