கந்தர்வகோட்டை, டிச.20: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முதுகுளத்தில் உள்ள பயணியர் நிழற்குடை மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கந்தர்வகோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முதுகுளம் கிராமும் ஒன்றாகும். இங்குள்ள பயணியர் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. பயணியர் நிழற்குடை இடிந்து விபத்து ஏற்படும் முன்னர் அதை அகற்றிவிட்டு புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கட்டிடம் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் பல கட்டிடங்கள் வீணாகி வரும் வேளையில் மக்கள் பயன்படுத்தும் நிழற்குடை சேதமடைந்துள்ளதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது வியப்பை தருகிறது.