×

இன்றைய மின்நுகர்ேவார் கூட்டம்

மதுரை, டிச. 20:மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளி) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை தெற்கு (மெட்ரோ) மின்பகிர்மான செயற்பொறியாளர் சுஜா தலைமை வகிக்கிறார்.கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, ஊரகம் அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து மின்நுகர்வோரும் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயனடைலாம்.

உசிலம்பட்டி : உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (20ம் தேதி) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நடக்கிறது. மதுரை கே.புதூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்ேவார்கள் தங்களது மின்விநியோக குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்.

Tags : electrician meeting ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை