×

மாவட்டம் ஹெல்மட் விழிப்புணர்வு பிரசாரம்

வாடிப்பட்டி, டிச. 20:வாடிப்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கான சாலை விதிகள் குறித்த கருத்தரங்கு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.தாய் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி தலைமை வகித்தார். வாடிப்பட்டி மோட்டார் வாகன பகுதி அலுவலக ஆய்வாளர் இளங்கோவன் சாலை விதிகளை பின்பற்றுவது மற்றும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து ஹெல்மட் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது. வாடிப்பட்டி நீதிமன்றம் அருகே துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. இதில் திரளானோர் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.


Tags : district ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்