×

திருத்துறைப்பூண்டி -வேதை பைபாஸ் சாலை ரவுண்டானாவை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி. டிச.20:  திருத்துறைப்பூண்டி- வேதை பைபாஸ்  சாலை ரவுண்டானாவை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலையில் ரவுண்டானா இல்லாததால் தினந்தோறும் விபத்து ஏற்பட்டு பல பேர் காயம் அடைவதுடன் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து இந்தஇடத்தில் சுமார் 1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கும் பணிகடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.ஆனால் இந்த ரவுண்டானாவுக்குள் சிலபகுதிகளில் மண் அடிக்கப்பட்டது.

மேலும் வேறு ஏதும் பராமரிப்பு செய்யப்படவில்லை. வேலைநடைபெறும் போதும், நிறைவு பெற்ற பின்னரும் எத்தனைலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது என்பதற்கான விளம்பரபலகை வைக்கப்படவில்லை. இந்நிலையில் கஜா புயலில் ரவுண்டானாவில் நடுவில் அமைத்திருந்த 60அடி உயர் மின்கோபுர விளக்கு நொறுங்கி கிடக்கிறது. புயல் தாக்கி 35 நாட்களாகியும் சீரமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. மேலும் புல்கள் மண்டிக்கிடக்கிறது.பலமாதங்களாக ரவுண்டானாவை பராமரிப்பு பணியை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றுபல பேர் விண்ணப்பம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவே ரவுண்டானாவை சீரமைப்பதுடன் பராமரிப்பு பணிகளை தாமாக முன்வந்து கேட்பவர்களுக்கு கொடுத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruthuraipondi - Vayal Bypass Road Roundabout ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்