கரூர்,டிச.20: ராயனூர் செல்லும் சாலையில் சாலையோர முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து ராயனுார் செல்லும் சாலையின் இரு புறத்திலும் முட்காடுகள் உள்ளன. அவ்வப்போது மழை பெய்வதால் சீத்தைமுட்கள் முளைத்து மரங்கள் அதிகமாக உள்ளன. போதுமான மின்விளக்கு வசதி செய்யப்பட வில்லை. இதனால் வேலை முடிந்து இரவு வீடு திரும்புவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருக்கிறது. சாலையோரம் உள்ள முட்செடி களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.