டெல்லி: தடுப்பூசி குறித்த புள்ளி விவரங்கள் அறியாமல் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுப்பூசிகள் இருப்பு குறித்து புள்ளி விவரங்கள் தெரியாமல் பல தலைவர்கள் தவறான கருத்துக்களை தெரிவித்து வருவது துரதிஷ்டவசமானது என்றும் மாதம் தோறும் வழங்கக்கூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து 15 நாட்களுக்கு முன்பாகவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற தவறான கருத்துக்களை தெரிவிப்பதை தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள மத்திய அமைச்சர் கடந்த மாதம் 11 கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜூலை மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன என்றும் 75 சதவீத தடுப்பூசிகளை அரசு கொள்முதல் செய்த பிறகு அதற்கு மேல் உள்ள தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்….
The post தடுப்பூசி விஷயத்தில் மலிவான அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் appeared first on Dinakaran.