×

20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி விருதுநகரில் விஏஓ.க்கள் பேரணி

விருதுநகர், டிச. 19: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் விஏஓக்கள் பேரணி தொடங்கினர். அப்போது கைகளில் கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி மாரியம்மன் கோவில், மெயின்பஜார், தெப்பம், நகராட்சி, எம்ஜிஆர் சிலை, சாத்தூர் ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக கலெக்டர் அலுவலம் சென்றடைந்தது.

அங்கு கலெக்டர் சிவஞானத்திடம் அளித்த மனுவில், ‘விஏஓக்களில் 50 சதவீத பெண்கள் உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் பணியில் உள்ளனர். சொந்த மாவட்டங்களில் மாறுதல் ஆணை பிறப்பிக்க வேண்டும். விஏஓ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வழிச்சான்றிதழ் மற்றும் இணையதள பணி செலவின வசதிகளை செய்து தரவேண்டும். இ.அடங்கலை விஏஓ டிஜிட்டல் கையொப்பம் இட்டு வழங்க வேண்டும். தனிச்சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Virudhunagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...