×

துக்க வீட்டிற்கு சென்றவரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

கீழக்கரை, டிச. 19: கீழக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 7ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகரில் மளிகை கடை வைத்திருப்பவர் முருகேசன். இவரது மனைவியின் தாயார் இறந்ததால், குடும்பத்துடன் கீழக்கரை தட்டான்தோப்புக்கு சென்று விட்டனர். இதை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு கதவுக்கு வேறு புதிய பூட்டு போட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை வீடு திரும்பிய முருகேசன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக கீழக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதில், நாங்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் திருடு போனதாக தெரிவித்திருந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வீட்டிலுள்ள பீரோ, கதவுகளில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். கீழக்கரை பகுதியில் சமீபகாலமாக திருட்டு சம்பவம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : jewelery ,robbery ,mourner ,house ,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...