காரைக்குடி, டிச. 19: காரைக்குடியில் இந்திய மருத்துவர் சங்க கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவேரி மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் நிர்மலாதேவி வரவேற்றார். தலைவர் டாக்டர் சையது அன்சாரி தலைமை வகித்தார். ஐஎம்ஏ மாநில செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதிவிப் பிரமாணம் செய்து வைத்தனர். ஐஎம்ஏ கிளை புதிய தலைவராக டாக்டர் காமாட்சி சந்திரன், செயலாளராக டாக்டர் கண்ணன், பொருளாளராக டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநில நிர்வாகிகள் டாக்டர் பழனிவேல்ராஜன், டாக்டர் முத்துராஜ், காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் சலீம், டாக்டர் ராதாசந்திரன், டாக்டர் மணிவண்ணன், டாக்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் காமாட்சி சந்திரன் பேசுகையில், ‘பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் சிறந்த பாலமாக ஐஎம்ஏ கிளை செயல்படும். வரும் ஜனவரி முதல் எங்கள் பணி செயல்பட தொடங்கும். அனைத்து டாக்டர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்’ என்றார்.