×

திருவிடைமருதூர் அருகே எஸ்ஐ இடமாறுதலுக்கு எதிர்ப்பு பொதுமக்கள் மறியல் முயற்சி

திருவிடைமருதூர், டிச. 19: திருநீலகுடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்ஐ இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநீலக்குடி காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக அருள்குமார் கடந்த 14 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பேராவூரணிக்கு சப்இன்ஸ்பெக்டர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். எஸ்ஐ இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநீலகுடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அந்தமங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.


இதைதொடர்ந்து மணல் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் என பல்வேறு குற்ற சம்பங்களை தடுத்து குறைப்பதற்கு  பெரும் முயற்சி எடுத்து வந்த எஸ்ஐ அருள்குமாரை இடமாறுதல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்கள், வாலிபர்கள் இணைந்து காரைக்கால் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இந்த தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி ராமச்சந்திரன், திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இடமாறுதல் என்பது தவிர்க்க முடியாது என்று கூறினர். இதையடுத்து போராட்டம் நடத்தாமல் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : SI ,Thiruvidimarudur ,
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’