×

கந்தர்வகோட்டை அருகே மட்டங்காலில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டம்

கந்தர்வகோட்டை, டிச.19: கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் பகுதியில் கஜா புயல் நிவாரணம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கந்தர்வகோட்டை தாசில்தார் ஆரமுததேவசேனா பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது நிவாரனம் வாங்கியவர்கள் தவிர்த்து மற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உரிய மனு எழுதிக் கொடுத்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்  பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இதே போல் மஞ்சம்பட்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வரவில்லை என கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறியதன்  பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : road ,Mattanchery ,Gandharvatte ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை