×

சீர்காழி தென்பாதி டிடி பிள்ளை குளத்தில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி,டிச,19: சீர்காழி தென்பாதி டிடி பிள்ளை குளத்தில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி தென்பாதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட டி.டி.பிள்ளை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலப்போக்கில் குளத்தில் கழிவுநீர் கலந்ததால் குளத்து நீரை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துவிட்டனர். தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் குளத்திற்கு முழுமையாக தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

குளத்தில் பெரும்பாளான பகுதிகளை செடி கொடிகள் மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தின் தண்ணீர் மேலும் மாசடைய வாய்ப்புள்ளது. பொதுமக்களின் நலன் கருதி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றியும் செடி கொடிகளை அகற்றவும் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : south ,Sirkali ,mangrove plants ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!