×

வேதாரண்யத்தில் மாணவி மர்ம சாவு

வேதாரண்யம்,டிச.19: வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகை, கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த சேகர் மகள் ராஜேஸ்வரி (12) 8ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள மாணவியர் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 16ம் தேதி தன் மகளை பார்ப்பதற்காக சேகரும், அவரது மனைவி வள்ளியும் சென்றனர். அப்போது தன் மகள் ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததை  கண்டு, உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, முதலுதவி பெற்று பின்பு தீவிர சிகிச்சைக்காக ராஜேஸ்வரியை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி கடந்த 16ம் தேதி இறந்து விட்டார், இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : death ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்