×

வேடசந்தூர் அருகே மில்லில் பெண் மர்ம சாவு?

வேடசந்தூர், டிச. 19: வேடசந்தூர் அருகே மில்லில் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூர் அருகே  விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இங்கு உளுந்தூர்பேட்டை, கோட்டான்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் விஜயலட்சுமி (19). இங்குள்ள விடுதியில் தங்கி ேவலை பார்த்து வந்தார். நேற்று இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேடசந்தூர் பகுதி மில்களில் அதிக அளவில் பெண்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், போலீசார் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Martha ,death ,mills ,Vedasandur ,
× RELATED 5 ரைஸ் மில்களில் ஐடி திடீர் ரெய்டு...