×

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

கரூர்,டிச.19: சொக்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் நகரில் உள்ள அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு பகல் பத்து நிகழ்வு கடந்த 8ம்தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நடை பெற்ற மோகினி அலங்கார நிகழ்வுடன் முடிவுற்றது. நேற்று ராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று அதிகாலை 5.30மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் வரிசையாக காத்திருந்த பொதுமக்களும் பெருமாளை பின்தொடர்ந்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, கரூர் நகர பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை 5.30மணி முதல் மதியம் வரை நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : deity ,devotees ,
× RELATED மாரியம்மனுக்கான நேர்த்திக் கடன்கள்