×

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் விவசாயிகள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

சூலூர், டிச. 19: விளை நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூர் அருகே சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.     விளை நிலத்தில் மின் கோபுரம் அமைத்து உயர் மின் அழுத்த கேபிள் கொண்டு செல்ல தமிழக அரசும், பவர்கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விளை நிலங்களில் அத்துமீறி நுழைந்து நில அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல.  இதை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் பல்லடம், பொள்ளாச்சி சாலையில் தனியார் நிலத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று முன்தினம் துவக்கினர். நேற்று 2ம் நாளாக போராட்டம் நடந்தது.  இதில் திமுக மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சுல்தான்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்லடம் அருகில் கள்ளிப்பாளையம்  பகுதியில் இரண்டாம் நாளாக போராட்டம் நடந்தது.

Tags : tower ,farms ,waitress ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...