×

துடிசியா சார்பில் தூத்துக்குடியில் டிச.21 முதல் தொழில் கண்காட்சி

தூத்துக்குடி, டிச.19:  தூத்துக்குடியில் துடிசியா சார்பில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.இதுகுறித்து துடிசியா தலைவர் நேருபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்ட சிறுதொழிற்சங்கம் (துடிசியா) சார்பில் ஏற்கனவே 6 முறை தொழில் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் தொழில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இம்முறை மேட் இன் தூத்துக்குடி என்ற பொருளில் இக்கண்காட்சி நடக்கிறது. இதன்மூலம் மாவட்டத்தை தொழில் துறையில் முன்னேறிய மாவட்டமாக முன் நிறுத்துவதும், மாவட்டத்தில் தொழில் துவங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதாகும். புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு துறைகள் மற்றும் வங்கிகள் சார்பில் பல அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது உற்பத்தி துறையில் ஈடுபட்டுவரும் குறு, சிறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தப்படவுள்ளனர். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் கடம்பூர், கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


Tags : Tuticorin ,exhibition ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...