×

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்

சென்னை, டிச. 19: தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்காமல் மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்த அனைவருக்கும் உடனே பணி வழங்க வேண்டும் என்று அகில இந்திய ரயில்வே அப்ரண்டீஸ் சங்கம் சார்பில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், 21.6.2016க்கு முன்பு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். 18.9.2018 அன்று நடந்த குரூப் டி தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். உடல்தகுதி தேர்வு வைக்க கூடாது. அப்ரண்டீஸ் சட்ட திருத்தம் 2014ன்படி பயிற்சி முடித்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Tags : finals ,Southern Railway ,
× RELATED சி ல் லி பா யி ன் ட்…